முதியோர் இல்லம் அருகே டாஸ்மாக் கடைகளை அமைக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் அய்யம்பாளையம் கிராம பஞ்சாயத்து பகுதியில், முதியோர் இல்லம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து அய்யம்பாளையம் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ராஜூ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே அமைக்கக்கூடாது என்று உச்சநீதிமன்ற உத்தரவை குறிப்பிட்ட நீதிபதிகள், இதுபோன்ற வழிமுறைகளை டாஸ்மாக் கடைகள் அமைக்கும்போது பின்பற்ற வேண்டும் என்றனர். வழிபாட்டுத்தலங்கள் கல்வி நிறுவனங்கள் அருகே அமைக்கக்கூடாது என்ற உத்தரவு, முதியோர் இல்லங்களுக்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். முதியோர் இல்லங்கள் அருகே டாஸ்மாக் மதுபானக்கடைகள் அமைத்தால், அவர்களின் அமைதியான வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் கூறிய நீதிபதிகள், முதியோர் இல்லங்கள் அருகே அரசு மதுபான கடைகள் அமைக்கக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்