ஹைதராபாத் அணியை வென்றதுபோல சென்னையையும் வெல்வோம் என டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான வெளியேற்று சுற்றுப்போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய டெல்லி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நாளை 2வது தகுதிச்சுற்று போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியும் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதால், நாளைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் டெல்லிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளிலும் சென்னை அணி எளிதாக வெற்றி பெற்றுள்ளது. எனவே நாளை போட்டியில் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “ஹைதராபாத் அணிக்கு எதிராக வென்றதால் ஏற்பட்ட மகிழ்ச்சியை கூற வார்த்தையில்லை. கடந்த இரண்டு வருடங்களாக நான் தகுதிச்சுற்றுகளை அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்தேன். அணியில் இருக்கும் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியை காண முடிகிறது. ஹைதராபாத்தை வென்றதுபோல சென்னைக்கு எதிராகவும் வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அடுத்த போட்டியிலும் முன்னேறிச்செல்வோம். ஆனால் சென்னை அணி சிறப்பாக விளையாடி வந்துள்ளனர்” என்று கூறினார்.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!