மேற்கு வங்கம் மாநிலம் முர்ஷிதாபாத் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலின் போது ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் பலியானார்.
மேற்கு வங்கம் மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் முர்ஷிதாபாத் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. இவர்கள் முர்ஷிதாபாத் தொகுதியிலுள்ள பக்வாங்கோலா வாக்குச்சவாடியில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குச்சவாடியிலிருந்து 300 மீட்டர் தொலைவில் காங்கிரஸ் கட்சியனர் மற்றும் திரிணாமுல் கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் டியாரூல் ஷேக் என்ற காங்கிரஸ் தொண்டர் ஒருவர் இறந்துள்ளார். அத்துடன் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தொண்டர் மெஹபூப் ஷேக் மற்றும் திரணாமுல் கட்சியின் தஹிஜூல் ஷேக் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
#WATCH West Bengal: Unidentified men hurled a bomb near polling booth no-27,28 in Murshidabad's Raninagar area. #LokSabhaElection2019 pic.twitter.com/9qUkhxBJ8Q — ANI (@ANI) 23 April 2019
இதனிடையே முர்ஷிதாபாத் தொகுதியின் ராணி நகர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகிறது. அதில் சிலர் தங்களது முகத்தை மூடிக்கொண்டு நாட்டு வெடி குண்டுகளை வீசுவது போல் காட்சிகள் அமைந்துள்ளன.
முர்ஷிதாபாத் நடைபெற்ற கலவரங்கள் குறித்து அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அபு ஹெனா கூறியது “இன்று தேர்தலின் போது நடைபெற்ற வன்முறையில் எங்கள் கட்சியின் தொண்டர் ஒருவர் இறந்துள்ளார். ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களை பயமுறுத்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அத்துடன் அவர்கள் வாக்குச்சாவடியை கைப்பற்ற போகும் போது எங்கள் கட்சியனர் தடுத்தாதால் அவர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
Loading More post
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?