திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே, நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேடப்பட்டு வந்த 4 பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மாணவியை அதே கிராமத்தைச் சேர்ந்த விஜய், அஜித், முருகேஷ், தாஸ் என்ற 4 இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக தெரிகிறது. வீட்டில் இருந்து தப்பி காட்டுக்குள் ஓடிய மாணவியை, நான்கு பேரும் விடாமல் துரத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி, அங்கிருந்து தப்பி வீட்டுக்குள் ஓடி வந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மாணவியை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நான்கு இளைஞர்களையும் தேடி பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்