அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 14 பேர் சார்பில் தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அயனாவரத்தில் சிறுமி பாலியல் வான்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், போக்சோ சட்டத்தின்கீழ் 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டுள்ள 17 பேரில், 14 பேர் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்த மனுவை ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் அவர்கள் மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை சிபிஐ-க்கோ அல்லது வேறு அமர்வுக்கோ மாற்ற முடியாது என்று கூறியது. மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்