தமிழகம் போராட்டக்களமாக மாறியுள்ள சூழலில், அரசு நிர்வாகம் முடங்கியிருப்பது வேதனையளிப்பதாக, திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முடங்கி கிடக்கும் மாநில அரசு நிர்வாகத்தை, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் செயல்பட வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை சென்று சந்திக்க மறுக்கும் முதலமைச்சரை தமிழகம் பெற்றிருப்பது வேதனையளிக்கிறது. இரட்டை இலை சின்னத்திற்கு 60 கோடி பேரம் என செய்தி வந்தவுடன், அமைச்சர்கள் இரு பிரிவுகளாக தனித்தனியாக கூடி பேசுகின்றனர். முதலமைச்சரும், அமைச்சர்களும் தங்கள் கடமைகளை மறந்து உள்கட்சி பிரச்னையில் உறைந்து போயிருக்கின்றனர். அரசியல் சட்டப்படி மாநில அரசு நிர்வாகம் செயல்படுகிறதா? என்ற மிகப்பெரிய சந்தேகமே இப்போது உருவாகியிருக்கிறது. எனவே, மக்கள் நலனை கருத்தி கொண்டு, முடங்கி கிடக்கும் மாநில அரசு நிர்வாகத்தை செயல்பட வைக்க ஆளுநர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?