அசாம் மாநிலத்திற்கு பிரதமர் மோடி வருகையை கண்டித்து மேலாடையின்றி போராட்டம் நடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அசாம் மாநிலத்திற்கு இன்று சென்ற பிரதமர் மோடி அங்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, குடியுரிமை மசோதாவால் அசாம் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது என உறுதி அளித்தார்.
இதனிடையே அசாம் மாநிலத்திற்கு பிரதமர் மோடி வருகையை கண்டித்து மேலாடையின்றி போராட்டம் நடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதவிர சில இடங்களில் பிரதமர் வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்பட்டதுடன் உருவ பொம்மை எரிப்பு, கறுப்பு பலூன்கள் பறக்க விடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. இது தவிர ஒரு அமைப்பு 12 மணி நேர வேலைநிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தது. இதனால் வடக்கு அசாம் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மத்திய அரசின் குடிமக்கள் பதிவேடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டங்கள் நடைபெற்றன.
பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர் அல்லாத 6 மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசின் மசோதா வழிவகுக்கிறது. இம்மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ள நிலையில் மாநிலங்களவையில் எதிர்ப்பு காரணமாக நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, குடியுரிமைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெறும் நிலையில் அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்