மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் அறிவிப்புகள் பாஜகவின் தேர்தல் அறிவிப்புகள்தான் என அதிமுக எம்.பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தம்பிதுரை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், “வருமான வரிக்கு 5 லட்சம் வரை விலக்கு தந்திருப்பது போதாது. பல்வேறு திட்டங்களை விவசாயிகளுக்கு அறிவித்துள்ளனர். குறிப்பாக, 5 ஏக்கர் வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் தருவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது போதாது. 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்திருக்கலாம். பட்ஜெட் அறிவிப்புகளில் சிலவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதுவரை மத்திய அரசு எந்த நல்லதும் தமிழகத்திற்கு செய்யவில்லை. கஜா புயல் பாதிப்புக்கு இன்னும் நிவாரணம் வந்து சேரவில்லை. ஜி.எஸ்.டியில் 5 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. பல்வேறு துறைகளின் நிலுவைத்தொகையாக சுமார் 9 ஆயிரம் கோடி உள்ளது. நீட் தேர்வில் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. இன்னும் மீனவர்கள் பிரச்னை இருக்கிறது. மேகதாது அணை கட்டக்கூடாது என கூறிவருகிறோம். முல்லை பெரியாரில் மீண்டும் அணை கட்ட மத்திய அரசு பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் யோசனை செய்து தான் தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி என்று அதிமுக கூறியுள்ளது.
5 ஆண்டு காலம் பாஜக அரசு பல்வேறு பட்ஜெட்டுகளை சமர்ப்பித்தது. அதில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது அறிவித்திருக்கும் அறிவிப்புகள் பாஜகவின் தேர்தல் அறிவிப்புகள். பொன்.ராதாகிருஷ்ணன் யாருடன் கூட்டணி சேர விரும்புகிறார் என தெரியவில்லை. தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி என முதலமைச்சர் தெளிவாக சொல்லியுள்ளார். தமிழகத்திற்கு செய்யப் போகும் நல்லது என்னவென்று தேசிய கட்சிகள் சொல்லட்டும். பிறகு ஆலோசிப்போம்.” எனத் தெரிவித்தார்.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!