திருவண்ணாமலையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை ரமணா நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அருணை குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். காப்பகத்தின் உரிமையாளராக திருவண்ணாமலையைச் சேர்ந்த பாபு என்பவரும், வினோத்குமார் என்பவர் மேலாளராகவும் உள்ளனர். இந்த காப்பகத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும், உரிய பாதுகாப்பு ஏதுமில்லை என்றும், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாகவும் கூறி மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது காப்பகத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமலும், மேலும் மாணவிகள் சிலருக்கு உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த 15 மாணவிகளை மீட்டு அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காப்பகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள், கணினியின் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததார்.
அத்துடன் காப்பக உரிமையாளர் பாபு மற்றும் மேலாளர் வினோத்குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காப்பகத்தில் பணிபுரிந்த காவலாளி மண்ணாங்கட்டி, பெண் சமையலர் சுசீலா மற்றும் காப்பக மேலாளரின் மனைவி ராஜலட்சுமி ஆகியோரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்