சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனை தொடர்பாக, எந்த ஆவணமும் வெளியிடப் படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
2017ஆம் ஆண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 32 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அதில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்களைக் கைப்பற்றிய வருமான வரித்துறை, அதனைக் கசியவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதில் அமைச்சர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்ததால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென திமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வில் கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என வருமான வரித்துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், 89 கோடி ரூபாய்க்கு பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆவணங்கள், தங்கள் தரப்பில் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மதிப்பீடு செய்ய கால அவகாசம் இருப்பதால், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை பதிலளித்துள்ளது.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?