ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்க சென்றபோது துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த ஆய்வாளர் பெரியபாண்டிக்கு மதுரவாயல் காவல் நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னை கொளத்தூரில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லக்ஷ்மி ஜுவல்லரி என்ற நகை கடையின் மேற்கூரையை உடைத்து 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி மற்றும் 2 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்கள் ராஜஸ்தானில் இருப்பதாக தெரியவந்தது. இதனை அடுத்து கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை 2017ஆம் ஆண்டு டிசம்பரில் ராஜஸ்தான் சென்றது.
அங்கு பாலி மாவட்டத்தில் உள்ள செங்கல் சூலையில் கொள்ளையர்கள் நாதுராம், தினேஷ் சவுத்ரி, பக்தாராம் பதுங்கிருப்பதை கண்டறிந்த தனிப்படை காவல்துறையினர் அங்கு சென்றனர். அவர்களை கைது செய்ய முற்பட்டபோது, கொள்ளையகளுக்கும் காவல்துறையினர் மோதல் ஏற்பட்டது. அப்போது ஆய்வாளர் முனிசேகர் தனது துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பெரியபாண்டி மீது பட்டது. இதில் பெரியபாண்டி உயிர் இழந்தார்.
இந்நிலையில் அவர் உயிர் இறந்து ஒராண்டு நிறைவடைந்ததையொட்டி பெரியபாண்டியின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம், மூவிருந்தாலிகு துணை ஆணையர் சுதாகர், காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் மற்றும் துணை ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான காவல் குழுவினர் பெரியபாண்டியன் நினைவிடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பெரிய பாண்டியன் வீட்டினருக்கு ஆறுதல் கூறிய அவர்கள், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வந்தான் கொடுத்த கல்வெட்டையும் பெரியபாண்டியன் நினைவாக அங்கு பதித்தனர். அதனை துணை ஆணையர் திறந்து வைத்தார். பின்னர் பெரியபாண்டியன் நினைவாக ஊர்மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. அதனை காவல்துறையினரே பரிமாறியுள்ளனர்.
இதுமட்டுமின்றி பெரியபாண்டியன் கடைசியாக பணியாற்றிய மதுரவாயல் காவல் நிலையத்தில் பெரியபாண்டிக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு துணை ஆய்வாளர்கள் பரத் மற்றும் செல்லதுரை தலைமையிலான காவலர்கள், காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியபாண்டியன் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.
அவர்களை தொடர்ந்து சக காவலர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் நினைவு அஞ்சலி செலுத்தினர். மேலும் அங்கு ஆதரவில்லா குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!