காஷ்மீரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. இதில் 6 பேர் பலியாகினர்.
இடைத்தேர்தல் நடைபெற்ற ஸ்ரீ நகர் மக்களவைத் தொகுதியில் மாலை 6 மணிவரை 6 புள்ளி 5 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சாந்தனு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த புர்ஹான் வானி என்ற இளைஞர் கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட தொடர் வன்முறை காரணமாக, மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஸ்ரீ நகர் மக்களவைத் தொகுதி எம்பி தாரிக் ஹமீது காரா தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியாக இருந்த ஸ்ரீ நகர் மக்களவைத் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், வாக்களிக்க வேண்டாம் என பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்ததை அடுத்து, வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்றது.
இதனிடையே, 200க்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் 6 பேர் பலியாகினர். போராட்டக்குழுவினர் கற்களை வீசித் தாக்கியதில், பாதுகாப்புப் படையினர் பலரும் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், பிரிவினை வாத இயக்கத்தினர் இரண்டு நாட்கள் முழுஅடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
Loading More post
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்