பிரிட்டனில் நீச்சல் குளத்துக்கு அடியில் நடத்தப்பட்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தலைநகர் லண்டனில் நடந்த இப்போட்டிக்காக காந்தகத்தில் உருவாக்கப்பட்ட செஸ் காய்கள் பயன்படுத்தப்பட்டன. நீரில் அவை மூழ்காது என்பதால், காந்தக காய்கள் பயன்படுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். நீச்சல் குளத்தின் ஆழமான பகுதியில் செஸ் போர்டு வைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டதால், ஒவ்வொரு முறையும் மேலெழும்பி வந்து காற்றை சுவாசித்து விட்டு, பின்னர் மூச்சை அடக்கி போட்டியாளர்கள் விளையாட நேர்ந்தது.
மூளைக்கும், உடலுக்கும் சேர்த்து நடத்தப்பட்ட இப்போட்டி தங்களை உற்சாகப்படுத்தியதாக போட்டியாளர்கள் தெரிவித்தனர். வழக்கமான செஸ் போட்டிகள் அரை மணி நேரத்தில் முடிவுக்கு வந்து விடும். ஆனால் நீச்சல் குளத்தில் நடந்த போட்டி என்பதால், ஒவ்வொரு போட்டியும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீண்டது. இறுதியில் ராஜ்கோ வுஜதோவிக் என்ற வீரர் வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!