நீதிபதி கே.எம் ஜோசப்பின் சீனியாரிட்டி குறைக்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் மூத்த நீதிபதிகள் முறையிட்டனர்.
நீதிபதிகளை பரிந்துரைக்கும் கொலீஜியம் அமைப்பில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நேரில் சந்தித்தனர். அப்போது, உத்தரகாண்ட் தலைமை நீதிபதியாக இருந்த ஜோசப்பின் பெயர் 6 மாதங்களுக்கு முன்பே கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டதாகவும், ஆனால் மத்திய அரசு அறிவிக்கையில் அவரது பெயர் மூன்றாவதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உறுதியளித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வினீத் சரண், ஜோசப் ஆகியோர் பெயரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஏற்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. அவர்கள் இன்று பதவியேற்றும் நிலையில், பணி மூப்பு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டுள்ளது.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix