இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல கார்களில் செல்வோர் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் செல்வோர்கள் ஹெல்மெட் அணிவது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல கார்களில் செல்வோர் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய நீதிபதி, கேரளாவில் அதிவேகத்தில் சென்ற கேரளா முன்னாள் கவர்னர், கேரளா தற்போதைய நீதிபதி ஆகியோரின் வாகனங்கள் ரேடார் மூலம் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்திலும் சட்டவிதிகள் உள்ளது. அதனை அமல்படுத்துங்கள் என்று அறிவுறுத்தினார். கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் சட்டத்தை காவல்துறையினர் முதலில் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இருசக்கர வாகனங்கள் எதிரில் வருபவர்களுக்கு இடையூறாக ஒளி எழுப்பும் ஹை பீம் (high beam) விளக்குகளை தடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
முகப்பு விளக்குகளின் நடுவில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், இந்த பரிந்துரைகளை நிறைவேற்றியது குறித்தோ அல்லது நிறைவேற்ற திட்டமிட்டது குறித்தோ ஜூலை 27-ம் தேதி டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்