இங்கிலாந்து போர்டு லெவன் அணியுடனான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, அபார வெற்றி பெற்றது.
இந்திய ஏ அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இங்கிலாந்தில் போர்டு லெவன் அணிக்கும் இந்திய ஏ அணிக்குமான முதல் ஒரு நாள் போட்டி, லீட்ஸில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற போர்டு லெவன் அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய் தது.
அதன்படி களமிறங்கிய இந்திய ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக் காரர் பிருத்வி ஷா 61 பந்தில் 70 ரன்களும் கேப்டன் ஸ்ரேயேஸ் ஐயர் 45 பந்தில் 54 ரன்களும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் 46 பந்தில் 50 ரன்களும் குணால் பாண்ட்யா 34 ரன்களும் எடுத்தனர்.
(இஷான் கிஷான்)
பின்னர் இறங்கிய இங்கிலாந்து போர்டு லெவன் அணி, 36.5 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 125 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் அதிகப்பட்சமாக மாட் கிறிட்ச்லே 40 ரன்கள் எடுத்தார்.
இந்திய தரப்பில் தீபக் சாஹர் (சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடியவர்) 7.5 ஓவர்களில் 3 விக்கெட்டை சாய்த்தார். அக்சர் படேல் 2 விக்கெட்டையும் பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, விஜய் சங்கர், குணால் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்