பராமரிப்பு பணிகளுக்காக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று மாலை முதல் தாற்காலிகமாக மூடப்படுவதாக தமிழக வனத்துறை அறிவித்துள்ளது.
ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியா, மியான்மர், பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வர்ணநாரை, அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை உள்ளிட்ட 24 வகையான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வேடந்தாங்கல் வந்து செல்வது வழக்கம். ஆண்டுதோறும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பறவைகள் வரும். தற்போது ஏரியில் தண்ணீர் வற்றி வருவதால், பெரும்பாலான பறவைகள் இங்கிருந்து பறந்துவிட்டன. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பறவைகள் உள்ள நிலையில் சரணாலயத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று மாலை 6 மணி முதல் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தாற்காலிகமாக மூடப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீஸன் தொடங்கி இதுவரை 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வந்து சென்றிருப்பதாக வன சரகர் சுப்பைய்யா தெரிவித்துள்ளார்.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி