பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம், விரைவில் சோதனை அடிப்படையில் சில நகரங்களில் பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுகள் வலம்வரும் என தெரிகிறது.
இதுகுறித்து மத்திய இணை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் பாராளுமன்றத்தில் அளித்த பதிலில் நாட்டின் 5 பகுதிகளில் பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடித்து சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்கத் தேவையான மூலப்பொருள்களை கொள்முதல் செய்யவும், பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்கவும் ரிசர்வ் வங்கிக்கு நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் பருத்தி மற்றும் பருத்தி துணியிலான பொருட்களினால் தயாரிக்கப்படுகின்றது. ஆனால் பிளாஸ்டிக் மூலப்பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் நோட்டுகள் பருத்தி நோட்டுகளை விட அதிக நிறைய நாட்கள் நீடிக்கும். கள்ள நோட்டு அடிப்பதும் கடினம் என கூறப்படுகிறது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்