பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக நான் கூறவில்லை என்று நடிகை நிகிஷா படேல் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக 'புலி' படத்தில் அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழில், ‘என்னமோ ஏதோ’, ‘நாரதன்’, ‘7 நாட்கள்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது கஸ்தூரி ராஜா இயக்கும் ’பாண்டி முனி’ படத்தில் நடித்து வருகிறார். இவர் பிரபுதேவாவை தனக்கு பிடிக்கும் என்றும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் பேட்டி ஒன்றில் கூறியதாகச் செய்திகள் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதை நிகிஷா மறுத்துள்ளார். ’கடந்த சில நாட்களாக மீடியா வெளியிடும் செய்திகளால் பாதிப்படைந்துள்ளேன். பிரபுதேவாவை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படுவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை. அவரைப் போன்ற ஒருவரை திருமணம் செய்துகொள்ள ஆசை என்று கூறியிருந்தேன். அதை திரித்து வெளியிட்டு விட்டார்கள். பிரபுதேவா எனக்கு நண்பர் மட்டும்தான்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?