சென்னை சேலையூர் பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், மதுபானக் கூடத்தை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சேலையூரை அடுத்த மப்பேடு பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மக்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த 11ஆம் தேதி அங்கு புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 70க்கும் மேற்பட்டோர், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.
பொதுமக்களைக் கண்டதும் டாஸ்மாக் கடையை ஊழியர்கள் மூடிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அருகில் இருந்த மதுபான கூடத்தை அடித்து நொறுக்கினர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி