சீன விண்வெளி நிலையமான ’டியன்காங்-1’-ன் உடைந்த பாகங்கள் தெற்கு பசிபிக் கடலில் விழும் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 29- ஆம் தேதி ‘டியன்காங்-1’ என்ற விண்வெளி நிலையத்தை விண்ணில் நிறுவியது சீனா. இது சீனாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கூடம். 10 மீட்டர் நீளம் மற்றும் 8 டன்கள் எடை கொண்ட இந்த ஆய்வுக்கூடம் தனது பணிகளை 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் முடித்துக்கொண்டது. அதன் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. இந் நிலையில் ‘டியன்காங்-1’ செயலற்று விட்டதாக 2016-ம் ஆண்டு சீனா அறிவித்தது.
இந்த விண்வெளி நிலையத்தின் பாகங்கள், இன்று பூமியில் விழும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். ஆனால் எங்கு விழும் என்று தெரியவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், கடலில்தான் விழும் என ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.
அதன்படி, தெற்கு பசிபிக் பகுதியை நோக்கி ஆய்வுக்கூட பாகங்கள் வந்து கொண்டிருப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வளிமண்டலத்துக்கு மேலேயே பெரும்பாலான பகுதிகள் எரிந்து அழிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் பூமிக்கு பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai