தமிழகம் எனும் அமைதியான குளத்தில் ஹெச்.ராஜா கல்லெறிந்துவிட்டதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், தமிழ்ச் சமுதாயம் தந்தைபெரியாரை கடவுள் மறுப்பாளராக மட்டும் பார்க்கவில்லை என்றும், அவர் சமூக மறுமலர்ச்சிக்காக பாடுபட்டவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் தன்னையே அர்ப்பணித்துக்கொண்டவர் என குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் மற்ற மாநிலங்கள் பல்வேறு பிரச்னைகளால் பற்றி எரிந்தபோது கூட தமிழகம் அமைதிப்பூங்காவாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த அமைதியான குளத்தில் ஹெச்.ராஜா கல்லெறிந்துவிட்டார் என்பது தான் தமிழக மக்களின் தீராதக் கோபம் என கூறியுள்ளனர். ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்திருந்தாலும் தமிழக மக்களின் மனம் புண்பட்டு போயிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தில் எப்படியாவது குழப்பம் விளைவித்து, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று கருதுபவர்களின் எண்ணம் என்றைக்கும் பலிக்காது என்று இருவரும் கூறியுள்ளனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!