லஞ்சப்புகாரில் கைதான ஆம்பூர் டிஎஸ்பி தன்ராஜின் சென்னை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், மாதந்தோறும் குவாரியில் மணல் அள்ளி விற்பனை செய்வதற்காக டிஎஸ்பி தன்ராஜ், எஸ்ஐ லூர்து ஜெயராஜ் ஆகியோருக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது மணல் குவாரி மூடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பணம் தரக்கோரி காவல்துறையினர் வலியுறுத்தியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக பன்னீர்செல்வம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அவர்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ஒரு லட்சத்து 45,000 ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக வழங்கியபோது ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் தன்ராஜ் மற்றும் எஸ்ஐ லூர்து ஜெயராஜ் ஆகியோர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே சென்னையில் உள்ள டிஎஸ்பி தன்ராஜின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். லஞ்ச புகாரில் காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'