மது குடிப்பதால் கல்லீரல் பாதிக்கப்படும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கல்லீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக தனி வார்டு அமைத்து சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிற்கு உத்தரவிட கோரி ஆனந்த ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2008ம் ஆண்டு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் நோய் பாதிப்பிற்கு 85,112 பேர் வெளி நோயாளிகளாகவும், 7,157 பேர் உள்நோயாளியாகவும் சிகிச்சை பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். கடந்த 2014ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாவும் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மதுகுடிப்பதே 80 சதவீதம் காரணம் என்றும் கூறியிருந்தார்.
இதுதொடர்பான விசாரணையில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, கல்லீரல் சம்பந்தமான நோய்களுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக தெரிவித்தது. மது அருந்துவதாகல் மட்டுமே கல்லீரல் பாதிக்கப்படுவதில்லை என்றும் தமிழக அரசின் சார்பில் ஆஜரான சுகவனம் தெரிவித்தார். மது குடிப்பதால் கல்லீரல் பாதிக்கப்படும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!