நீலகிரியில் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருவதால் ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி குந்தா, போன்ற தாலுக்காக்களில் இரவு முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக குன்னூர் மேட்டுபாளையம் சாலையில் 5வது கொண்டை ஊசி வளைவு மற்றும், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதகையில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்திற்கு செல்லும் லாரி மற்றும் சுற்றுலாப் பேருந்துகள் கோத்தகிரி வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.
இதேபோன்று உதகையில், கோத்தகிரி சாலையில் கட்டபெட்டு, நடுஹட்டி போன்ற இடங்களிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 30-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு இடங்களில் ஜேசிபி வாகனம் மூலம் மண்சரிவை அப்புறப்படுத்தி வருகின்றனர். தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் அவ்வப்போது சாலையில் விழும் மரங்களையும், மண் சரிவையும் அகற்றி வருகின்றனர். இரண்டு நாட்களாக இடைவிடாது பெய்து வரும் தொடர் மழை காரணமாக வணிக நிறுவனங்கள், உணவகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும் இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் மின்சாரம் இல்லாத காரணத்தால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Loading More post
சூறைக்காற்றால் குளிரும் டெல்லி! விமான சேவைகள் பாதிப்பு
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்