தமிழக மக்களின் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்கும் முயற்சியில் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளதை வரவேற்பதாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சசிகலாவின் குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதற்கு அரசியல் தலைவர்களும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி ஒட்டப்பிடாரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “இந்த சோதனை ஒரு குடும்பத்தின் மீது நடத்தப்படுவதாகவோ அல்லது ஒரு கட்சி மீது நடத்தப்படுவதாகவோ பார்க்கக் கூடாது. தமிழக மக்களின் பணம் தவறான முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்கும் முயற்சியில் வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். அதைத்தவிர்த்து இதை ஒரு குடும்பத்தின் மீது நடத்தப்படும் சோதனையாக பார்க்கக்கூடாது” என்று கூறினார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்