ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில், அந்நாட்டு ராணுவம் அதிரடியாக அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.
ஜிம்பாப்வேயின் அதிபராக ராபர்ட் முகாபே பதவி வகித்து வருகிறார். இவரின் நடவடிக்கை நாட்டின் சமூக மற்றும் பொருளாதாரத்தை நசுக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, நாட்டின் முழு அதிகாரத்தையும் ராணுவம் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக அதிபர் முகாபேவுக்கு நெருக்கமான நபர்களை குறிவைத்து ராணுவம் இந்நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேசமயம் அதிபர் முகாபேவும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிபர் எங்கு இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை முகாபே எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. துணை அதிபர் எம்மர்சனை பதவியில் இருந்து நீக்கியதை தொடர்ந்து, இந்நடவடிக்கையை ராணுவம் எடுத்துள்ளது. இதனால் அங்கு ராணுவ புரட்சி நடந்துள்ளதா என்ற சந்தேகம் சர்வதேச நாடுகள் மத்தியில் வலுத்து வருகிறது. எனினும் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடவில்லை என ஜிம்பாப்வே ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்