நடிகர் சிவாஜி கணேசனின் சிலை கல்வெட்டில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் அகற்றப்பட்டது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவாஜி மணி மண்டபத்தில் இருக்கும் அவரது சிலையின் கல்வெட்டில் இருந்து கருணாநிதியின் பெயரை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஆளும் கட்சியினர் அகற்றியுள்ளதாக திமுக வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். சிலையில் மீண்டும் கல்வெட்டை அமைக்கக் கோரி அக்டோபர் 10-ம் தேதி தமிழக அரசுக்கு மனு அனுப்பியும் அதில் எவ்வித பதிலையும் அளிக்காததால், இந்த விவகாரத்தில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். இதை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, இதுகுறித்து தமிழக அரசு 2 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்