டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர்.
நாகை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். கீழ்வேளூரை அடுத்துள்ள ஆணைமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சுதர்சன். 11ஆம் வகுப்பு படித்துவந்த இவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவர் சுதர்சன் உயிரிழந்தார். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நரேஷ்குமார் என்ற 9 வயது சிறுவன் உயிரிழந்தார்.
தர்மபுரி ராஜா தோப்பு கிராமத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை ஹரிஹரன் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தது. வேதாரண்யம் அருகே நெய் விளைக்கைச் சேர்ந்த 16 வயது சிறுமி அனுசுயா டெங்குக்கு பலியானார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியநேந்தலில் இரண்டரை வயது குழந்தை சிவகுரு காய்ச்சலுக்கு உயிரிழந்தது. இதேபோல், திண்டுக்கல் தோண்டணுத்து சேர்ந்த 13வயது சிறுவன் சையது அப்ரீடி, மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள சின்னமநாயக்கன்பட்டியில் இளம்பெண் நத்தினி என்பவரும் காய்ச்சலுக்கு உயிரிழந்தனர்.
Loading More post
எல்லாம் நம் பார்வையில் இருக்கிறது! #MorningMotivation #Inspiration
நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்பு
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix