பாலஸ்தீன விவகாரத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக இருப்பது பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹமாஸ் இயக்கம்தான்.
பாலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கம், 1980-களின் இறுதியில் தொடங்கிய முதலாவது பாலஸ்தீன எழுச்சியின்போது ஷேக் யாசின் என்பவரால் உருவாக்கப்பட்டது. தற்போது இதன் தலைவர் கலேத் மேஷல். மேற்குக் கரையிலும் காஸாவிலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட அமைப்பு இது. இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்று இந்த இயக்கத்தின் தொடக்க சாசனத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. 1990களில் இஸ்ரேலுக்கு எதிராக குண்டுவெடிப்புகளையும் தற்கொலைப்படைத் தாக்குதல்களையும் இந்த அமைப்பு நடத்தியிருக்கிறது.
இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இந்த அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருக்கின்றன. ஆனால், தொடக்க காலத்தில் இஸ்ரேலுக்கு எதிரான வன்முறைகளை நடத்திய ஹமாஸ் இயக்கம், பிற்காலத்தில் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியது. இதற்கு ஆதாரமாக இருப்பது 2006-ம் ஆண்டு நடந்த பாலஸ்தீனப் பொதுத் தேர்தல். இந்தத் தேர்தலில் யாசர் அராபத்தால் உருவாக்கப்பட்ட ஃபதா இயக்கத்தை எதிர்த்துக் களமிறங்கியது ஹமாஸ். யாரும் எதிர்பார்க்காத வகையில், ஃபதாவை வீழ்த்தி பாலஸ்தீனத்தின் மாபெரும் அரசியல் இயக்கமாக உருவெடுத்தது. கூட்டாட்சி அமைக்கப்பட்டது. இந்த அமைதிச்சூழல் வெகுநாட்கள் நீடிக்கவில்லை. 2007-ம் ஆண்டில் ஃபதா இயக்கத்துடனான கருத்து வேறுபாடு மோதலாக வெடித்தது. மோதல் பெரும் ஆயுதச் சண்டையாக உருவாகி, இரு இயக்கங்களும் நிரந்தரமாகப் பிரியும் நிலைக்குத் தள்ளப்பட்டன. மேற்குக் கரையில் இருந்து ஹமாஸ் இயக்கம் விரட்டப்பட்டது.
புவியியல் ரீதியாக மேற்குக் கரையில் இருந்து தனித்து இருக்கும் காஸா பிராந்தியத்துக்குள் ஹமாஸ் முடங்கியது. இங்கிருந்தபடியே, கடந்த 6 ஆண்டுகளில் இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான முறை ராக்கெட் தாக்குதலை ஹமாஸ் இயக்கம் நடத்தியிருக்கிறது. இதன் ஒட்டுமொத்த ராணுவ பலமே இதுபோன்ற ராக்கெட்டுகள்தான். இஸ்ரேலின் படைவலிமைக்கு முன்னால், இது ஒன்றுமேயில்லை. மேற்குலகம் முழுவதுமே பயங்கரவாத இயக்கமாகப் பார்த்தாலும், காஸா பிராந்திய மக்களுக்கு ஹமாஸ்தான் அரசாங்கம்.
Loading More post
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்