அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
கேரளா மாநில அறநிலையத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி பெற்ற அமைப்பான திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கீழ் 1248 கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் 6 தலித்கள் உட்பட 36 பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கேரளாவைப்போல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை தமிழக அரசும் பின்பற்றி ஆணை பிறப்பிக்க வேண்டும் என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். கேரளாவில் 90 ஆண்டுகளுக்கு முன் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தை தந்தை பெரியார் நடத்திய நிலையில், தற்போது கோயில் கருவறைக்குள் இருந்த தீண்டாமை ஒழிந்திருப்பது பெரியாரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்