ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.
வடக்கு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ள ஹஜின் பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து இன்று காலை முதல் ராணுவ வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஹஜினில் உள்ள பரிபல் கிராமத்தை ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது, இந்திய ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இந்த சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் கேணல் ராஜேஷ் கலியா தெரிவித்தார். அதேபோல் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர். மூன்று ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். மேலும் இரண்டு அல்லது மூன்று தீவிரவாதிகள் இன்னும் பதுங்கி இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இராணுவ வீரர்களின் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்