இந்தியா-பாகிஸ்தான் எல்லையான கார்கில் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மாயமாகியுள்ளார்.
கிருஷ்ணகிரி அருகேயுள்ள அகசியபள்ளி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் ராணுவத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளன. கார்கில் பனிமலை பகுதியில் சாலையை சீரமைக்கும் பணியில் சிவக்குமார் உள்பட 5 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால் சிவக்குமார் மாயமாகியுள்ளதாக ராணுவம் தரப்பில் இருந்து கிருஷ்ணகிரியில் உள்ள அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சோகத்தில் மூழ்கியுள்ள குடும்பத்தினர், சிவக்குமாரை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்