நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கர விழாவின் நான்காம் நாளான இன்றும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மகா புஷ்கர திருவிழா வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் காவிரி மகா புஷ்கர விழாவின் நான்காம் நாளான இன்றும் ஏராளமான பக்தர்கள் மயிலாடுதுறையில் புனித நீராடினர். இதற்காக தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
இதுதவிர, துலாக்கட்ட காவிரிக் கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் பக்தர்கள் வழிபட்டனர். இதில் காஞ்சி சங்கராச்சாரியார்கள், மற்றும் தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆதினகர்த்தர்கள் பங்கேற்றனர். இது தவிர பல்வேறு சைவ சமய மடாதிபதிகளும் மயிலாடுதுறையில் முகாமிட்டு புஷ்கர விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் நாளை ஏகாதசி என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதோஷம், மஹாளய அமாவாசை ஆகியவை அடுத்தடுத்த நாட்களில் வருவதால் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்