சென்னை விமான நிலையத்தில் உபர், ஓலா உள்ளிட்ட நிறுவனங்களின் கார்களுக்கு நிரந்தர வாகன நிறுத்தமிடம் தருவதை கண்டித்து பீரிபெய்டு டாக்சி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை விமான நிலையத்திற்கு உள்ளே பீரிபெய்டு டாக்சி ஓட்டுநர்களின் நிரந்தர நிறுத்தமிடம் உள்ளது. விமானத்தில் வரும் பயணிகளின் சேவைக்காக இந்த பீரிபெய்டு டாக்சிகள் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வந்துள்ள உபர் மற்றும் ஓலா நிறுவனங்கள், தங்களின் வருமானத்தை குறைத்து விட்டதாகவும், இதனால் அவர்களை விமான நிலையத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் டாக்சி ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் உபர் மற்றும் ஓலா நிறுவனங்களுக்கும் விமான நிலையத்தில் நிரந்தர நிறுத்துமிடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், விமான நிலைய நுழைவு வாயிலில் இன்று டாக்சி ஓட்டுநர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 180க்கும் மேற்பட்ட டாக்சி டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது முழக்கங்களை எழுப்பிய டாக்சி டிரைவர்கள், தங்களின் வாழ்வாதாரத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்