தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில், காவலர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று காலை முதல் நள்ளிரவை தாண்டி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார் உள்ளிட்ட 12 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷின் சந்தேக மரண வழக்கில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் என தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் பணிபுரிந்த 12 பேரை விசாரணை வளையத்தில் கொண்டுவந்திருக்கிறது சிபிசிஐடி.
இந்நிலையில், நேற்று காலை 11 மணி முதல் நள்ளிரவை தாண்டி விசாரணை நீடித்த நிலையில் காவலர் பவுன்ராஜ், காவல் நிலைய எழுத்தர் முனாஃப் ஆகியோரை விக்னேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். வாகனச் சோதனையின் போது விக்னேஷை காவலர் பவுன்ராஜ் தாக்கியதும், பின்னர் காவல் நிலையத்தில் வைத்து எழுத்தர் முனாஃப் தாக்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார், உதவி ஆய்வாளர்கள் புகழும் பெருமாள், கணபதி, தலைமைக் காவலர் குமார், மகளிர் காவலர் ஆனந்தி, ஊர்க்காவல் படை வீரர் தீபக், வாகன ஓட்டுனர் கார்த்திக் உள்ளிட்டோர் சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் இருக்கின்றனர். முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் காவலர்கள் இருவர் கைதாகி உள்ள நிலையில் மேலும் கைது நடவடிக்கைகள் தொடர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'