உழைப்பின் மேன்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமான உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் ட்விட்டரில் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் போராடி உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உழைப்பின் மேன்மையை உலகிற்கு எடுத்துரைத்த உயர் தினமாகவும் திகழும் மே தினத்தில் உலகெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
உலக தொழிலாளர் தினமான மே தினத்தை கொண்டாடும் கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் தமிழக உழைப்பாளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. தோழர் சிங்காரவேலர் ஏற்றிவைத்த மே தின செங்கொடி நாடெங்கிலும் பட்டொளி வீசி பறக்கட்டும் என கே.பாலகிருஷ்ணன் தனது மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
உலகமே கொண்டாடும் உழைப்பாளர் நாள், உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி உரிமையை வென்றெடுத்த தொழிலாளர்களின் வெற்றித் திருநாள். இந்நாளில் தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரான 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற இந்திய அரச வலியுறுத்துவோம். மே நாள் வாழ்த்துகள் என தொல்.திருமாவளவன் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் மே தின வாழ்த்துகள். pic.twitter.com/7p7hwaei6m
Loading More post
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.94.23 லட்சம் ரொக்கம் பறிமுதல் - தீவிர விசாரணை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'