நீட் விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தின் உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்துவருவதாக தெரிவித்தார். நீட் விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அப்போது பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் நீட் தேர்வு தேவையில்லை என்பதே அரசின் நிலைப்பாடு என்று தெரிவித்தார். எனினும் தற்போது நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுவதால், அதற்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கான பணிகளை அரசு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டங்கள் வெடித்துள்ளன. இன்று 5-ஆவது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என தம்பிதுரை கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading More post
இனி புதிய ஸ்டைலில் ரேஷன் கட்டிடம்.. தமிழக அரசு வெளியிட்ட மாதிரி வரைபடம்
’பொதுக்குழு என்ற பெயரில் அக்கிரமம்; ஓபிஎஸ்ஸை தாக்க திட்டம் தீட்டி இருந்தனர்’ - புகழேந்தி
சம்பளப் பணம், வேலை நேரம்-ல் பெரிய மாற்றம்.. புதிய தொழிலாளர் விதிகள் சொல்வதென்ன?
சென்னை கேகே நகரில் மரம் விழுந்து பெண் வங்கி மேலாளர் பலி
``உதயநிதி, இன்பநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கையில் திமுகவை பார்க்கிறோம்”- சி.வி.சண்முகம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி