குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டுவதற்கு பதிலாக அறிவித்தபடி ஸ்மார்ட் கார்டு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2011-ல் ஆட்சிக்கு வந்ததும் குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்ட அதிமுக அரசு, தற்போது மீண்டும் குடும்ப அட்டைகளில் உள் தாள் ஓட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார். சட்டமன்றத்தில் ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்காக அறிவிக்கப்பட்ட 318 கோடி ரூாபய் நிதி என்னவாயிற்று என்று தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அறிவிப்பும் ஆடம்பரமும் மட்டுமே அதிமுக அரசின் அடையாளங்கள் என்பதற்கு ஸ்மார்ட் கார்டு திட்ட அறிவிப்பு உதாரணம் என்றும் விமர்சித்துள்ளார். ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் முக்கியம் என்பதால், அறிவித்தபடி ஸ்மார்ட் கார்டு வழங்க முதலமைச்சர் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix