தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக்கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், சட்டப்பேரவையில் முதன்முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்த்தாய் வாழ்த்து நேரடியாக பாடப்பட்டது. தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டின் முதல் கூட்டம் தொடங்கியது. தன் உரையை தொடங்கிய ஆளுநர், கொரோனா இரண்டாவது அலையை சமாளித்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டினார்.
மேலும், ''மெகா முகாம்கள் நடத்தி அதன்மூலம் தடுப்பூசி போடும் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் தொற்றை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது''என்று தெரிவித்தார். இதனிடையே, நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததை எதிர்த்து விசிகவினர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உரைக்கு அதிமுகவினர் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!