தருமபுரி மாவட்டம் அரூரில் கடன் செலுத்தியதற்கு தடையில்லா சான்று வழங்க லஞ்சம் பெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு செயலாளர் கைது செய்யப்பட்டார்.
கோட்டப்பட்டியைச் சேர்ந்த விவசாயி நாகராஜன் என்பவர், அரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நில பத்திரத்தை அடமானம் வைத்து 63 ஆயிரம் ரூபாய் கடன்பெற்றுள்ளார். கடனை முழுமையாக செலுத்திய நிலையில், நில பத்திரத்தை திரும்ப பெறுவதற்கான தடையில்லா சான்று வழங்க வங்கியின் செயலாளர் முருகன் லஞ்சம் கேட்டுள்ளார்.
அதிகாரிகள் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகளை விவசாயி கொடுத்த போது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்ய முயன்றார். இதனை அறிந்த கூட்டுறவு வங்கிசெயலாளர் முருகன் கழிவறையில் பணத்தை வீசி தண்ணீரை திறந்துள்ளார். எனினும் தூய்மை பணியாளர்கள் மூலம் தண்ணீர் செல்லும் குழாயை உடைத்து பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், முருகனை கைது செய்தனர்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி