முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து கேரளாவைச் சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அணை பராமரிப்புக்காக இயந்திரங்கள், உபகரணங்களை எடுத்துச் செல்ல வசதியாக 23 மரங்களை வெட்டுவதற்கு இதுவரை கேரள அரசு அனுமதி தரவில்லை என கூறப்பட்டுள்ளது. அணையை பராமரிக்க செல்வதற்கான சாலையையும் செப்பனிடாமல் மோசமாக வைத்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து இதுவரை 40 முறை வெவ்வேறு நிபுணர்களால் அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டு, அதன் பலம் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அணை பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழகம் மேற்கொள்ளவில்லை என்று சொல்வது தவறானது என்றும் கூறப்பட்டுள்ளது.
அணை பராமரிப்பு பணியை காலதாமதப்படுத்தும் நோக்கிலும், 152 அடி வரை அணையில் நீர் தேக்கி வைக்கக் கூடாது என்பதற்காகவுமே ஜாய் ஜோசப் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்றும் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப்படிக்க...வானூர்தி விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள் : சஞ்சய் காந்தி முதல் பிபின் ராவத் வரை!
Loading More post
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!