Published : 06,Dec 2021 11:29 AM

கடன் தொல்லை: மகனை கொன்றுவிட்டு தம்பதியர் எடுத்த விபரீத முடிவு -தஞ்சையில் சோகம்

Debt-harassment-The-couples-tragic-decision-to-kill-their-son-Tragedy-in-Tanjore

கடன் தொல்லை காரணமாக, மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு பெற்றோர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை அருகே உள்ள மேலவெளி ஊராட்சி மனோ நகரைச் சேர்ந்தவர் ராஜா (37). ரியல் எஸ்டேட் அதிபரான இவர், தஞ்சை பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் சொந்தமாக டீ கடை வைத்துள்ளார். இவரது மனைவி கனகதுர்கா. இவர்களுக்கு ஸ்ரீவர்ஷன் (11) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

image

இந்த நிலையில் ராஜா தொழில் சம்பந்தமாக ஏற்கெனவே அதிகளவில் கடன் வாங்கியிருக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு கனகதுர்கா, தனது தம்பிக்கு நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து காலையில் தனது அக்கா அனுப்பிய தகவலை பார்த்த தம்பி, அதிர்ச்சியடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகன் படுக்கையில் உயிரிழந்த நிலையிலும், ராஜாவும், கனகதுர்காவும் தூக்கில் தொக்கிய நிலையில் இறந்துள்ளனர்.

இதனையடுத்து அங்க வந்த கள்ளபெரம்பூர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜா கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்லமனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லைதற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறதுஅதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றனஅவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலைஆர்.புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்