ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விடுவிக்கப்படுவதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விடுவிக்கப்பட்டு, ஜெயலலிதா பேரவையின் புதிய செயலாளராக மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன் கென்னடி நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதே போல் மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா விடுவிக்கப்பட்டு, உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் அப்பொறுப்பில் நியமிக்கப்படுவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அம்மா அணியின் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கசாமி நியமிக்கப்படுவதாகவும் தினகரன் அறிவித்துள்ளார். இதே போல் தஞ்சாவூர் மாவட்டக் கழக செயலாளர், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரும் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தினகரன் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கழகப் பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலைப் பெற்றே எடுக்கப்பட்டுள்ளதாகவும் தினகரன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
நடிகை மீனாவின் கணவர் மரணம்: கொரோனா பக்கவிளைவுகள் காரணமா?
தூத்துக்குடி: 36 பயணிகளுடன் சென்ற ஆம்னி பேருந்தில் தீ விபத்து
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix