சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் இன்று முதல் இணைய வழி சேவை மூலம் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
இதற்காக சன்னிதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 22 இடங்கில் QR code பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதோடு பக்தர்கள் 9495999919 என்ற மொபைல் எண் மூலம் ‘கூகுள் பே’ செயலி வழியாகவும் காணிக்கை செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவையை, தனலக்ஷ்மி வங்கியுடன் இணைந்து சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் போர்டு செய்துள்ளது. QR Code பலகைகளும், தொடர்பு எண் பற்றிய பலகைகளும் கோயிலின் உள்ளே சன்னிதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள நிலக்கல் உட்பட 22 இடங்கில் வைக்கப்பட்டுள்ளன.
வரும் நாள்களில் இந்தப் பலகைகளை சபரிமலைக்கு செல்லும் பாதைகளிலும், பல்வேறு இடங்களில் வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சபரிமலை செயல் அலுவலர் கிருஷ்ண குமார வாரியர் தெரிவித்துள்ளார். மேலும் “இந்த இணைய வழி காணிக்கை வசதி, பக்தர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்தி: மால்வேர் அலர்ட் காரணமாக பிளே ஸ்டோரிலிருந்து ஏழு அப்ளிகேஷன்களை நீக்கிய கூகுள்!
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!