கன்னியாகுமரி மாவட்டம் பருத்திக்கடவு, நெடும்புறம், வைகலூர் பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளித்த மக்களை படகு மூலம் மீனவர்களும், காவல்துறையினரும் மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. அனைத்து நீர்நிலைகளும் முழுமையாக நிரம்பியதால், ஊருக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், கன்னியாகுமரியின் பல்வேறு பகுதிகள் தீவு போல காட்சியளிக்கின்றன. குறிப்பாக பருத்திக்கடவு, நெடும்புறம், வைகலூர் உள்ளிட்ட பகுதிகளை தாமிரபரணி ஆற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால், 500-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சுமார் 8 அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்திருப்பதால், மீனவர்கள் படகு மூலம் சென்று, அங்கிருக்கும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பலர் கால்நடைகளை விட்டுவிட்டு, முகாம்களுக்கு வர தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. எனினும், உயிரை பணயம் வைத்து, முகாம்களுக்கு வர ஆர்வம் காட்டிய மக்களை, மீனவர்களும், காவல்துறையினரும் படகு மூலம் மீட்டு அழைத்து வந்தனர். அப்போது வெள்ளம் ஆர்ப்பரித்தால், படகை இழுத்து வரும்போது, காவல்துறையினர் தடுமாறி கீழே விழும் நிலையும் ஏற்பட்டது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!