கன்னியாகுமரி மாவட்டம் பருத்திக்கடவு, நெடும்புறம், வைகலூர் பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளித்த மக்களை படகு மூலம் மீனவர்களும், காவல்துறையினரும் மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. அனைத்து நீர்நிலைகளும் முழுமையாக நிரம்பியதால், ஊருக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், கன்னியாகுமரியின் பல்வேறு பகுதிகள் தீவு போல காட்சியளிக்கின்றன. குறிப்பாக பருத்திக்கடவு, நெடும்புறம், வைகலூர் உள்ளிட்ட பகுதிகளை தாமிரபரணி ஆற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால், 500-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சுமார் 8 அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்திருப்பதால், மீனவர்கள் படகு மூலம் சென்று, அங்கிருக்கும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பலர் கால்நடைகளை விட்டுவிட்டு, முகாம்களுக்கு வர தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. எனினும், உயிரை பணயம் வைத்து, முகாம்களுக்கு வர ஆர்வம் காட்டிய மக்களை, மீனவர்களும், காவல்துறையினரும் படகு மூலம் மீட்டு அழைத்து வந்தனர். அப்போது வெள்ளம் ஆர்ப்பரித்தால், படகை இழுத்து வரும்போது, காவல்துறையினர் தடுமாறி கீழே விழும் நிலையும் ஏற்பட்டது.
Loading More post
ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் போட்டோவை கிழித்து செருப்பால் அடித்த ஆதரவாளர்கள்!
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவிகளிடம் பேசி சமாதானப்படுத்த உத்தவ் மனைவி முயற்சி!
‘அம்மாவின் இதயத்தில் இருந்து... என் எதிர்காலத்தை...’ - ஓ.பி.எஸ். உருக்கமான பேச்சு
வலுவான மும்பையை வீழ்த்தி மாஸ் காட்டிய ம.பி அணி.. முதல்முறையாக வசமானது ரஞ்சிக் கோப்பை!
அட்லியுடனான கெமிஸ்ட்ரி.. ஜவான் சீக்ரெட்களை உடைத்த ஷாருக் கான்!
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'