பெரம்பலூரில் தொடர்மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதால் அவர்களை பாதுகாப்பாக தங்கவைக்க சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக ஆணையர் குமரிமன்னன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் இரவு முதல் தற்போது வரை பரவலாக மழைபெய்து வருகிறது. தொடர்மழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளை நகராட்சி ஆணையர் குமரிமன்னன் நேரில் ஆய்வு செய்தார். அண்ணாநகர், அரணாரை ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட வீடுகளை ஆய்வுசெய்த நகராட்சி ஆணையர், அங்கிருந்தவர்களை சிறப்பு முகாம்களில் தங்கவைக்குமாறு உத்தரவிட்டார்.
விடாது பெய்யும் அடை மழை: திருவாரூர், மயிலாடுதுறையில் விவசாயம் பாதிப்பு
மேலும் அருகில் உள்ள நகராட்சி குளத்தை பார்வையிட்ட அவர், நீர் வரத்து வாய்க்கால்களை சீரமைத்துள்ளது பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், பெரம்பலூர் நகராட்சிப் பகுதிகளில் பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைக்க 5 சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாக கூறினார். மேலும் தேவைப்பட்டால் பள்ளிக்கட்டடங்களில் பொதுமக்களை தங்கவைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்