நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பொள்ளாச்சியை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள முத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்திவாசன். இவர் ஏற்கெனவே 3 முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில் 4ஆவது முறையாக கடந்த மாதம் அத்தேர்வை எழுதினார். கேள்வித்தாள் கடினமாக இருந்ததாக கூறி வந்த கீர்த்திவாசன், இந்த முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாதோ என்ற அச்சத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை விஷமருந்திய கீர்த்திவாசன் அதை தன் தாயிடம் தெரிவித்துள்ளார். உடனே கீர்த்திவாசனுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது வழியிலேயே அவர் உயிரிழந்தார். எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். தற்கொலை எண்ணம் எழுந்தால் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் மரணம்: கொரோனா பக்கவிளைவுகள் காரணமா?
எல்லாம் நம் பார்வையில் இருக்கிறது! #MorningMotivation #Inspiration
நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்பு
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix