ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் வரும் 1ஆம் தேதி திங்கள்கிழமை முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
காலையிலிருந்து மாலை வரை வழக்கம்போல் முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும். தினமும் ஏற்கெனவே அறிவித்தபடி சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். அதாவது, திங்கள் கிழமை ஒரு வகுப்பிற்கு பாடம் நடத்தப்பட்டால் செவ்வாய் கிழமை அவர்களுக்கு விடுமுறை. மீண்டும் புதன்கிழமை அவர்கள் வரவேண்டும்.
எந்த வகுப்பினரை எந்த நாட்களில் வர வைக்க வேண்டும் என்பதை அந்த அந்த பள்ளி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம். ஏனென்றால் ஒரு பள்ளியில் ஒரு வகுப்பறையில் வெவ்வேறு எண்ணிக்கையில் மாணவர்கள் இருப்பார்கள். எனவே அந்த எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அந்த அந்த பள்ளி மாணவர்களை திங்கள்கிழமை வரவைக்க வேண்டுமா? அல்லது செவ்வாய்க்கிழமை வரவழைக்க வேண்டுமா? என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். இதுபோன்று ஒரு வகுப்பிற்கு ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடைபெறும்.
சென்னையில் எந்தெந்த நேரங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி? - காவல் ஆணையர் விளக்கம்
ஒரு வகுப்பறையில் 20 மாணவ மாணவிகள் மட்டுமே இருக்கும் வகையில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட வேண்டும். மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டியதில்லை. பெற்றோர் விருப்பத்தின் அடிப்படையில் அனுப்பலாம். வழக்கம்போல் சத்துணவு வழங்கப்படும். ஆன்லைன் வழியில் கல்வி தேவைப்படுவோர் தொடர்ந்து ஆன்லைனில் படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!