ராகுல், தவான் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 188 ரன்கள் சேர்த்து சாதனை படைத்துள்ளனர்.
இந்தியா- இலங்கை இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ராகுல், தவான் இலங்கை அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 188 ரன்கள் சேர்ந்து சாதனை படைத்துள்ளது. இலங்கை மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக முதல் விக்கெட்டிற்கு அதிக ரன்கள் எடுத்து இந்த ஜோடி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பாக 1993ல் மனோஜ் பிராபாகர் மற்றும் நவ்ஜோட் சிந்து ஜோடி முதல் விக்கெட்டிற்கு 173 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை ராகுல், தவான் ஜோடி முறியடித்தது.
சிறப்பாக விளையாடிய ராகுல் 135 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். தவான் 123 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் இரண்டு டெஸ்ட் போடிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய நிலையில் மூன்றாவது டெஸ்டிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide